’என் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்’: பயங்கரவாதிகள் மீது புகார்!

’என் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்’: பயங்கரவாதிகள் மீது புகார்!
’என் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்’: பயங்கரவாதிகள் மீது புகார்!

’பயங்கரவாதிகள் தனது மனைவியை பாலியல் வன்முறை செய்தனர்; என் குழந்தையை கொன்றுவிட்டனர்’ என்று ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட கனடாவைச் சேர்ந்த ஜோஷூவா பாயல் கூறியுள்ளார். 

கனடாவை சேர்ந்தவர் ஜோஷூவா பாயல். இவர் மனைவி அமெரிக்காவை சேர்ந்த கெயிட்லன் கோல்மேன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்தபோது தலீபான் ஆதரவு பெற்ற ஹக்கானி பயங்கரவாதிகளால் இவர்கள் கடத்தப்பட்டனர். அப்போது கெயிட்லன் கர்ப்பிணி. இவர்கள் 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். இந்நிலையில் இவர்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்டுள்ளது. இவர்கள் இப்போது கனடாவுக்குச் சென்று சேர்ந்துள்ளனர். 
டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷுவா பாயல், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த போது, தனது மனைவியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர், என் குழந்தையை கொன்றுவிட்டனர் என்று தெரிவித்தார். பயங்கரவாதிகளின் தலைவரால், தங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பாதுகாவலர், என் மனைவியை பாலியல் வன்முறை செய்தார். ஆப்கானிஸ்தான் அரசு எனக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com