3வது முறை கனடா பிரதமர் - நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ

3வது முறை கனடா பிரதமர் - நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ

3வது முறை கனடா பிரதமர் - நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ
Published on

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக கனடா பிரதமராகி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 338 இடங்களில் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலை போல சிறு கட்சிகளின் ஆதரவோடு ட்ரூடோ மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

தேர்தல் வெற்றியை தொடர்ந்து மக்களுக்கு உரையாற்றிய ட்ரூடோ, நாட்டுக்கு சேவையாற்ற மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி இருப்பதாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலில் வென்றதன் மூலம் மீண்டும் லிபரல் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைத்து இளம் வயதிலேயே பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ.

எனினும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் அவரது செல்வாக்கு குறைந்து மைனாரிட்டி ஆட்சி அமைக்க நேர்ந்தது. இந்த தேர்தலில் அவர் வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருத்துகணிப்புகள் வெளிவந்தன. ஆனால் அதனை பொய்யாக்கி ட்ரூடோ ஆட்சி அமைக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com