ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் பிரதமர் ஷின்சோ அபேவின் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மொத்தம் உள்ள 465 தொகுதிகளில் அபேவின் சுதந்திர ஜனநாயக கட்சியும், அதன் கூட்டணி கட்சியும் 312 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அபேவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.