''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல்

''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல்

''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல்
Published on

மும்பையில் கடந்த 2008ஆம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10 ஆண்டு நினைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் இஸ்ரேலின் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சக தலைவர் மைக்கேல் ரோனென் பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர், மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவையும், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான நட்புறவை சீர்குலைக்கும் நோக்கிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

எனினும், பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்கவில்லை என்றும், முன்பை விட, இந்தியாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது என்று தெரிவித்தார். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள் உள்பட மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com