ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அடுத்த நிலை தலைவரும் கொல்லப்பட்டார்: ட்ரம்ப்

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அடுத்த நிலை தலைவரும் கொல்லப்பட்டார்: ட்ரம்ப்
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அடுத்த நிலை தலைவரும் கொல்லப்பட்டார்: ட்ரம்ப்

ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் பக்தாதி உயிரிழந்த நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் ‌உள்ள தலைவரும் கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பக்தாதியை, பல ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் அவர் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமெரிக்க சிறப்பு அதிரடி படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவம் சுற்றிவளைத்ததை உணர்ந்த பக்தாதி, தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். பக்தாதியின் உயிரிழப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் பக்தாதிக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியு‌ள்ளார். ட்விட்டரில் இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளார். பக்தாதியின் அடுத்த நிலை தலைவர் யார், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற விவரங்களை ட்ரம்ப் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com