உலகம்
39 இந்தியர்களின் நிலை குறித்து தெரியவில்லை: ஈராக் பிரதமர்
39 இந்தியர்களின் நிலை குறித்து தெரியவில்லை: ஈராக் பிரதமர்
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை என அந்நாட்டு பிரதமர் அபாதி கூறியுள்ளார்.
ஈராக் நாட்டின் மொசூல் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் 39 பேரை ஐ.எஸ் பயங்கரவாதிகள், 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவர்களின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.