\
Mojtaba Khamenei & Masoud Pezeshkian
Mojtaba Khamenei & Masoud PezeshkianReuters

ஹிரோஷிமா நினைவு நாளில் ஈரான் அதிரடி.. அமெரிக்காவுக்கு பறந்த அணுஆயுத எச்சரிக்கை.!

அணுகுண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பேரழிவு மற்றும் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்த கதிர்வீச்சின் பாதிப்புகள், உலகம் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
Published on

ஹிரோஷிமா மீதான பேரழிவு தரும் அணு குண்டுவீச்சின் 81-வது ஆண்டு நினைவு தினத்தில், வாஷிங்டனின் அணுஆயுதக் கொள்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6, உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள்.

Hiroshima
Hiroshima Reuters

அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது. மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா மனிதகுலத்திற்கு புதிய அச்சுறுத்தலை உருவாக்குகிறது” என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அணுகுண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பேரழிவு மற்றும் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்த கதிர்வீச்சின் பாதிப்புகள், உலகம் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமான NPT-யில் கையெழுத்திட்டுள்ள ஈரான், அமைதியான அணுசக்தி பயன்பாட்டுக்கான தனது உரிமையைத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான தனது கடமைகளை அமெரிக்கா பல ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என்றும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அணு ஆயுதங்களை ‘தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் நியாயப்படுத்துவது ஆபத்தானது என ஹிரோஷிமா மேயர் கசுமி மட்சுய் எச்சரித்துள்ளார். அதிகரிக்கும் வன்முறை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள், மீண்டும் ஒரு ஹிரோஷிமா அல்லது நாகசாகி போன்ற பேரழிவை உருவாக்கிவிடக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 António Guterres
António Guterres Reuters

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

போரில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு ஆளான ஒரே நாடான ஜப்பான், தனது மூன்று அணுஆயுதமற்ற கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுவதாகக் கூறினாலும், அணுஆயுதங்களை அனுமதிப்பது குறித்த விதிகளில் மாற்றங்கள் செய்ய விவாதித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்த உலகளாவிய எச்சரிக்கைகள் வெளிவந்துள்ளன.

Iran's foreign ministry's spokesman Esmaeil Baghaei
Iran's foreign ministry's spokesman Esmaeil Baghaei AI

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஈரானிய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாயி அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பிக்காக்ஸ் மலையில் ரகசிய ஈரானிய அணுசக்தி தளம் இருப்பதாக அமெரிக்கா கூறுவது ஆக்கிரமிப்பிற்கான போலிச் சாக்குப்போக்கு என்று கூறினார். ஈரானின் நதான்ஸ் செறிவூட்டல் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியைத் தாக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள போதிலும், தேசிய பாதுகாப்பைக் காக்க ஈரான் ஒற்றுமையுடனும் தயார் நிலையிலும் இருப்பதாக பாகாயி உறுதியளித்தார். அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் மற்றும் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வர வேண்டும் ஆகிய மூன்று நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்றும் ஈரான் கூறியுள்ளது. உலகின் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்திலொரு பங்கு நடைபெறக்கூடிய இந்த நீரிணையின் தடுப்பாற்றல் மதிப்பு, ஓர் அணுகுண்டை விடவும் அதிகம் என்றும் ஈரான் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com