குழந்தைகள் போல பாட்டிலில் பால் குடிக்கும் குரங்குக் குட்டிகள்: வைரல் வீடியோ

குழந்தைகள் போல பாட்டிலில் பால் குடிக்கும் குரங்குக் குட்டிகள்: வைரல் வீடியோ
குழந்தைகள் போல பாட்டிலில் பால் குடிக்கும் குரங்குக் குட்டிகள்: வைரல் வீடியோ

இந்த வீடியோவைப் பார்த்தால் ஏதோ குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலூட்ட ஒரு தாய் பரிவுடன் தயாராகிறார் என்பதுபோலத் தோன்றும். ஆனால் அவருக்கு அருகில் ஓடியாடி விளையாடுபவை குரங்குக் குட்டிகள். வண்ண வண்ண கவுன் போட்டுக்கொண்டு மழலைகளாக துள்ளிக் குதிக்கின்றன. இந்த வீடியோ வைரலாகி மக்களைக் கவர்ந்துவருகிறது.

பால் பாட்டிலை தயார் செய்வதற்குள் ஒரு குட்டி உற்சாகத்தில் குட்டிக்கரணம் போடுகிறது. அப்பாடா... பார்ப்பதற்கே அத்தனை சுவாரசியமான காட்சி. அதிலென்ன ஆச்சரியம். அந்தக் குரங்குக்குட்டி ஒரு குழந்தையைப் போலவே பால் குடிக்க தவியாய் தவிக்கிறது.

இது உங்களை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தும் என்று அந்த வீடியோவை ஒருவர் பதிவிட்டுள்ளார். எந்த நேரத்தில் அந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. வீடியோ காட்சியில் அந்தப் பெண் பால் பவுடருடன் நீரைக் கலந்து தயார் செய்கிறார். பின்னர் மூன்று குரங்குக் குட்டிகளும் பாலை ஸ்டைலாக பிடித்துக்கொண்டு ஆர்வத்துடன் பால் அருந்துகின்றன.

பால் கிடைத்ததும் அவை பெரும் அமைதியுடன் காணப்படும் காட்சி ரசனையாக இருக்கிறது. அவை மனிதர்களைப் போலவே இருக்கின்றன என ஒருவர் டிவிட்டரில் கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை இந்த வீடியோ 50 ஆயிரம் லைக்குகளை அள்ளியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com