
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுப் பகுதியின் கடற்கரையில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாகப் பதிவானது.
இதையடுத்து, இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டடங்கள் இடிந்த நிலையில், மக்கள் வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் சுலா வேசியின் கடலோர நகரான பலுவில் திடீரென சுனாமி தாக்கியது.
(சுனாமிக்கு முன், சுனாமிக்கு பின்... சேட்டிலைட் படம்)
மூன்று மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகள் ஊருக்குள் புகுந்தன. அதில் கடற்கரையோரம் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வாகனங்கள் மற்றும் பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், மக்கள் அச்சத்தில் உறைந்து அலறியடித்து ஓடினர். சுனாமி எச்சரிக் கை திரும்பப் பெறப்பட்ட நிலையில், சுனாமி தாக்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 என்று முதலில் கூறப்பட்டது. இந்த எண்ணிக்கை இப்போது 1,234 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர் களின் உடல்கள் ஆங்காங்கே மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டன. மீட்பு பணி தொடர்ந்து நடந்துவருகிறது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு கள் சரி செய்யப்பட்டு வருகின்றன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.