அமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்!
அமெரிக்காவில் உயரமான மலையில் இருந்து உயிரிழந்த கேரள தம்பதியின் உடற்கூறு ஆய்வில், அவர்கள் மது அருந்தி இருந்தது தெரிய வந்துள்ளது.
கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர் டாக்டர் விஸ்வநாதன். இவர் மனைவி சுகாசினி. இவரும் டாக்டர்கள். இவர்கள் மகன் விஷ்ணு. செங்கானூரில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் படித்தார். இவருடன் படித்தவர் கோட்டயத்தை சேர்ந்த மீனாட்சி. இருவரும் காதலித் தனர். பெற்றோர்கள் சம்மதித்ததை அடுத்து குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் வேலைக்காக அமெரிக்கா சென்றனர். அங்கு வேலை செய்துகொண்டே, பல்வேறு பகுதிகளுக்கு சென்று சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். உயரமான இடங்களுக்கு சென்று செல்ஃபி எடுப்பதை வழக்கமாக வைத்திருந்த அவர்கள், அந்த சாகச அனுபவத்தை தங்களது வலைப்பதிவில் எழுதி வந்துள்ளனர். அதோடு தங்களது பெற்றோருக்கும் வாட்ஸ் ஆப்-பில் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மத்திய கலிபோர்னியாவில் உள்ள யாஸ்மிடே தேசிய பூங்காவுக்குச் சென்றனர். அது மிகவும் உயரமா ன மலைகள், அருவிகளைக் கொண்ட இடம். சுற்றுலாத்தலமான இங்கு பலர் டிரெக்கிங் செல்வதும் வழக்கம். பயங்கரமான இந்த பகுதியில், 800 அடி உயர மலை மீது விஷ்ணு, மீனாட்சி ஆகியோர் ஏறி சுற்றிப் பார்த்தனர். பின்னர் மலை உச்சியின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்று ள்ளனர். அப்போது நிலை தடுமாறி 800 அடி பள்ளத்தில் விழுந்தனர். இதில் அவர்கள் உடல் சிதைந்து உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர்கள் இருவரும் மது போதையில் இருந் தது தெரியவந்துள்ளது. ‘’எவ்வளவு குடித்தார்கள் என்கிற அளவு தெரியவில்லை.
மது போதையில் தான் அவர்கள் தவறி விழுந்திருக்க வேண் டும். கீழே விழுந்ததில் தலை,கழுத்து, மார்பு, அடிவயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது’’ என்று மருத்துவ அதிகாரி தெரிவித் துள்ளார்.