``இந்தியர்கள் பதுங்கு குழியிலாவது பத்திரமா இருங்க”- முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ்

``இந்தியர்கள் பதுங்கு குழியிலாவது பத்திரமா இருங்க”- முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ்
``இந்தியர்கள் பதுங்கு குழியிலாவது பத்திரமா இருங்க”- முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க பதுங்கு குழியிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ இருக்குமாறு முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது, ரஷ்யா தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. கார்கிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் இந்தியர்கள் சாலைகளில் நடமாடுவதை தவிர்த்து, வெடிகுண்டுகள் தாக்குதலை தாங்கும் திறன் கொண்ட பதுங்கு குழியிலோ, நிலவறையிலோ அல்லது வேறு பாதுகாப்பான இடங்களிலோ தங்கியிருக்க வேண்டும் என முன்னாள் ராணுவத் தளபதி என்.சி.விஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கான தக்க தருணம் அமையும் வரை இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும், பாதுகாப்புடன் இருப்பது பற்றி, அங்குள்ள இந்திய தூதரகம் வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com