உலகம்
இந்தியாவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி அமெரிக்காவில் கொலை - ஆற்றில் மிதந்த கணவர் சடலம்!
இந்தியாவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி அமெரிக்காவில் கொலை - ஆற்றில் மிதந்த கணவர் சடலம்!
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி ஒருவர், அவர் வசிக்கும் இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள ஜெர்சி நகரில் வசித்து வந்தவர் கரிமா கோத்தாரி. இவருக்கு 35 வயதாகிறது. இவரது கணவர் மன்மோகன் மால். இந்தத் தம்பதியினர் ஜெர்சி சிட்டியில் உள்ள உயரமான ஒரு குடியிருப்பில் 'நுக்கட்' என்ற இந்திய உணவகத்தை நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே இவர் கடந்த 26 ஆம் தேதி அவரது குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமாக இறந்து கிடந்துள்ளார். இவரது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இவரது மரணம் கொலை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்சி நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருந்ததும் அவர் உடல்முழுவதும் சந்தேகத்திற்கு இடமாக காயங்கள் இருந்ததும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.எஸ்.கோத்தரியின் கணவர் மன் மோகன் மால் 37, ஜெர்சி நகரில் ஹட்சன் ஆற்றில் இறந்து கிடந்தார் என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் இவரது மரணம் குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து டெய்லி வாய்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின்படி, கோத்தாரி ஒரு திறமையான சமையல்காரர் என்பதும் மன் மோகன் மால் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (ஐ.ஐ.டி) படித்த முன்னாள் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற அமெரிக்காவிற்கு வந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தம்பதி குறித்து “அவர்கள் ஒரு நல்ல ஜோடி” என்று நுக்கட்டின் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.