இந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி

இந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி
இந்தியா-பாக்.-சீனா வீரர்கள் இணைந்து கூட்டுப்பயிற்சி

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்திய ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர். 

ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மூலம் கடந்த 24-ம் தேதி ‘அமைதி இயக்கம்’ என்ற பெயரில் கூட்டு பயிற்சி தொடங்கியது. இதில், போர் புரியும் யுக்திகள், தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்டவைகள் பயிற்சி மூலம் விளக்கப்பட்டது. இதற்காக போர்க்களங்கள், பேரிடர் சூழல்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்தன. 

இக்கூட்டு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு வீரர்களுடன் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் இணைந்து களம் கண்டனர். தீவிரவாதத்துக்கு எதிரான இக்கூட்டு பயிற்சியில் இந்தியா முதன்முறையாக பங்குக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com