காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என கண்டனம் தெரிவித்திருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எஞ்சியிருக்கும் நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு உதவ, பிரிட்டன் படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உடனடியாக உதவ உலக நாடுகள் முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.