பாகிஸ்தான்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற இம்ரான் கான்

பாகிஸ்தான்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற இம்ரான் கான்
பாகிஸ்தான்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார், இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர்.

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்ற செனட் தேர்தலில் தனது நிதி மந்திரி அப்துல் ஹபீஸ் ஷேக் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியது. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதாக இம்ரான் கான் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ராசா கிலானி, பாகிஸ்தான் தெஹ்ரீக்--இன்சாஃப் (பி.டி.) வேட்பாளர் அப்துல் ஹபீஸ் ஷேக்கை புதன்கிழமை தோற்கடித்தார், தனது அமைச்சரவை சகாவுக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சாரம் செய்த பிரதமர் இம்ரான் கானுக்கு பெரும் அடியாக இது அமைந்தது.

பி.டி.எம் என்பது இம்ரான் கான் அரசாங்கத்தை கவிழ்க்க கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட 11 கட்சி கூட்டணியாகும், இந்த கூட்டணி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க முடிவு செய்ததால், எதிர்க்கட்சி இல்லாமலேயே நம்பிக்கை வாக்கெடுப்பு சோதனை நடந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com