இம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு!
பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், தனது நண்பர்களான இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், கவாஸ்வர் ஆகியோ ருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி, வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சிய மைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கான் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14 ஆம் தேதிக்குள் பதவியேற்பு விழாவை நடத்தும் முயற்சிகளில் அவர் தீவிரமாக உள்ளார். அந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் இம்ரான் கானின் கிரிக்கெட் நண்பர்களுமான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் இந்தி நடிகர் ஆமிர்கான் ஆகியோருக்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், விழாவில் இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. ஆனால் இன்னும் அழைப்பு விடுக்க வில்லை.