“இந்தியாவிற்கு எனது அனுதாபங்கள்; நாங்கள் உடன் நிற்கிறோம்” - ஜெர்மனி அதிபர்

“இந்தியாவிற்கு எனது அனுதாபங்கள்; நாங்கள் உடன் நிற்கிறோம்” - ஜெர்மனி அதிபர்
“இந்தியாவிற்கு எனது அனுதாபங்கள்; நாங்கள் உடன் நிற்கிறோம்” - ஜெர்மனி அதிபர்

கொரோனாவின் கோரப்பிடியில் மீண்டும் சிக்கித் தவித்து வரும் இந்திய மக்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் ஜெர்மனி நாட்டின் அதிபர் அங்கெலா மெர்க்கெல்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

“கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த போர் நம் எல்லோருக்குமான பொதுப் போராகும். இந்த இக்கட்டான நேரத்தில் ஜெர்மனி இந்தியாவுடன் நிற்கிறது. இந்தியாவுக்கு எங்கள் ஆதரவை கொடுக்க விரும்புகிறோம்” என ஜெர்மனி நாட்டின் அதிபர் அங்கெலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com