ஐடா புயலின் கோர தாண்டவத்தால் மோசமாக காட்சியளிக்கிறது நியூஜெர்சி மாகாணத்தின் தெற்குப் பகுதியான முல்லிகா ஹில். கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கட்டுமானங்களும் புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்திருக்கின்றன. 15 முதல் 20 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததால், பிரதான சாலைகள், ரயில்வே சுரங்கப் பாதைகள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 18-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.