புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங் மக்கள் மீண்டும் போராட்டம்

புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங் மக்கள் மீண்டும் போராட்டம்

புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங் மக்கள் மீண்டும் போராட்டம்
Published on

ஹா‌ங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கைதிகளை, சீனாவுக்கு நாடு கடத்துவதற்காக கொண்டு வரப்படவுள்ள புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு நீதி விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக ஹாங்காங் அரசு புதிய சட்ட மசோதாவை கொண்டு வர திட்டமிட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்றன. மசோதாவை ஹாங்காங் அரசு நிறுத்திவைத்தப்போதும், முற்றிலும் கைவிடக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அந்நாட்டு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில் வார இறுதி‌நாட்களில் அரசுக்கு எதிரான போராட்டத்தை பொதும‌க்கள் தொடங்கியுள்ளனர். அதன்படி பிரசித்தி பெற்ற வர்த்தக நகரமான மாங் காக்கில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை தொப்பி அணிந்தபடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அத்துடன் மறுபுறம் ஷிம் ஷா சுய் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு சிறிய அளவில் தீ வைத்து தங்களது கோரிக்கைகளை முழக்கமிட்டனர். 

மேலும், காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சே‌தப்படுத்தினர். இதைத் தொடர்ந்து கலவ‌ர தடுப்பு காவல்துறையினர் அவர்களை எச்சரித்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com