மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பணிந்தது ஹாங்காங் அரசு?

மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பணிந்தது ஹாங்காங் அரசு?
மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பணிந்தது ஹாங்காங் அரசு?

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதாவை ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் திரும்பப்பெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதிகளை சீனாவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலகக் கோரியும் ‌கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு வார இறுதியில் மட்டும் நடைபெற்ற போராட்டங்கள் தற்போது வார நாட்களிலும் நடைபெற்று வருவதால் அவ்வப்போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் வெடித்து வருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் சீன ராணுவமும், ஹாங்காங் காவல்துறையினரும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை ஏற்படுத்தவும் கைதிகளை நாடுகடத்தும் திட்ட மசோதாவை நிரந்தரமாக திரும்பப்பெற கேரி லாம் முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com