அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மக்கள் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.
இங்கு பனிப்பொழிவு தொடர்ந்து நிலவுவதால், வீடுகள், மரங்கள், சாலைகள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெண்போர்வையால் மூடிய நகரமாக காட்சியளிக்கிறது. பஞ்சு போன்ற மேகங்களுக்கு இடையே பறக்கும் நகரமாக மாறிப்போன சிகாகோவில், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர்.