மத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி - கடும் வெள்ளம்

மத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி - கடும் வெள்ளம்

மத்திய சீனாவில் கனமழை: ஹேனான் மாகாணத்தில் 12 பேர் பலி - கடும் வெள்ளம்
Published on

மத்திய சீனாவில் பெய்த கன மழையால் ஹேனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும் நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஜென்சூ நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், ஆறுகளாக மாறிவிட்டன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

சுரங்க ரயில் பாதைக்குள் நீர்புகுந்த நிலையில், இடுப்பளவு நீரில் மக்கள் தத்தளித்தனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com