hamas released 8 more hostages
ஹமாஸ் பிணைக் கைதிx page

3வது கட்டம் | 8 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்! அடுத்து எத்தனை பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு?

மூன்றாவது கட்டமாக, மேலும் 8 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் நேற்று (ஜன.30) விடுவித்துள்ளனர்
Published on

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

hamas released 8 more hostages
பிணைக்கைதிகள்x page

இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் முதற்கட்டமாக, தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜன.25ஆம் தேதி இரண்டாவது கட்டமாக, 4 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் வசமிருந்த 200 பாலஸ்தீனிய ஆண் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். என்றாலும், பணயக்கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவில்லை.

இதையடுத்து, அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. அதேவேளை, பணயக்கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், பிப்ரவரி 1ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்திருந்தது. மேலும், அடுத்து விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகள் 11 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டிருந்தது.

hamas released 8 more hostages
விடுவிக்கப்பட வேண்டிய 8 பிணைக்கைதிகள் உயிரிழப்பா? ஹமாஸ் சொல்வது என்ன?

இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக, மேலும் 8 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் நேற்று (ஜன.30) விடுவித்துள்ளனர். ஒப்பந்தத்தின்படி, மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும், ஐந்து தாய்லாந்து தொழிலாளா்களையும் ஹமாஸ் அமைப்பினா் நேற்று விடுவித்தனர்.

முதலாவதாக, இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றும் ஆகம் பொ்கா் (20) என்ற பெண்ணை ஹமாஸ் படையினா் விடுவித்தனா். அதைத் தொடா்ந்து, அா்பெல் யெஹூத் (29), காடி மோசஸ் (80) என்ற இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த இருவரும், வத்சர ஸ்ரீயாயூன் (33), போங்சக் தன்னா (36), சதியன் சுவங்கம் (35), பனாவத் சீதாவ் (27) சுரசக் லாம்னாவ் (32) ஆகிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து தொழிலாளா்களும் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டனா்.

hamas released 8 more hostages
ஹமாஸ்எக்ஸ் தளம்

தற்போது மேலும் எட்டு பிணைக் கைதிகள் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்கள் சிறைகளில் உள்ள 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவிருக்கிகிறது. அவா்களில் சுமாா் 30 போ் இஸ்ரேலியா்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி, உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஆயுள் தண்டனைக் கைதிகள் என்று கூறப்படுகிறது. நாளை, இஸ்ரேல் எதிர்பார்க்கும் அர்பெல் யாஹுட் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

hamas released 8 more hostages
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் | 2வது கட்டமாக 4 பணயக்கைதிகள் விடுவிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com