கொரோனா தடுப்பூசியால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000% அதிகரிப்பு - ஆய்வு

கொரோனா தடுப்பூசியால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000% அதிகரிப்பு - ஆய்வு

கொரோனா தடுப்பூசியால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000% அதிகரிப்பு - ஆய்வு

கொரோனா தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.  

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனை 2 டோஸ்களாகவும் முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் தடுப்பூசியும் போட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசின் தரவுத்தளமான VAERS வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹெல்த் இம்பாக்ட் நியூஸின் ஆசிரியரான பிரையன் ஷில்ஹவி கூறுகையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பின்விளைவை கடந்த  30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன். 2020 டிசம்பர் மாதத்துக்கு முன் 140 புற்றுநோய் பாதிப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தது. ஆனால் 2020 டிசம்பரில் தொடங்கி கொரோனா தடுப்பூசி அறிமுகமான 20 மாதங்களில் 837 புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது  10,661.4 சதவீதம் அதிகமாகும்'' என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com