சீனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் ஜி7 மாநாட்டில் முடிவு

சீனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் ஜி7 மாநாட்டில் முடிவு
சீனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் ஜி7 மாநாட்டில் முடிவு

3 நாட்கள் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் சீனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய 7 வளர்ந்த நாடுகளின் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இதில் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் வழங்க அனைத்து தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். மேலும் சீனாவின் சந்தை சாராத பொருளாதார கொள்கைகளை எதிர்கொள்ளவும் 7 நாடுகளின் தலைவர்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர். சீனாவில் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என ஜி 7 தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் பருவமநிலை மாற்ற பிரச்னையிலும் ஒருங்கிணைந்து செயல்பட வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் உறுதி தெரிவித்தனர். ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்போது, ஜி 7 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்களும் சீனாவுடன் பொருளாதார ரீதியாக போட்டியிடவும், முக்கிய பிரச்னைகள் குறித்து சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு விடுத்தார்.

ஜி 7 மாநாட்டின் முடிவில் விண்ட்சர் கோட்டையில் எலிசபெத் மகாராணியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி சந்தித்து பேசினர். அங்கு நடைபெற்ற விருந்திலும் அவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com