ஸ்பெயின்: ஒரே அடியில் பராமரிப்பாளரை தும்பிக்கையால் தூக்கிவீசிக் கொன்ற பெண்யானை!

ஸ்பெயின்: ஒரே அடியில் பராமரிப்பாளரை தும்பிக்கையால் தூக்கிவீசிக் கொன்ற பெண்யானை!
ஸ்பெயின்: ஒரே அடியில் பராமரிப்பாளரை தும்பிக்கையால் தூக்கிவீசிக் கொன்ற பெண்யானை!

ஸ்பெயினில் உள்ள ஒரு தேசிய விலங்கியல் பூங்காவில் பெண்யானை ஒன்று பூங்கா பராமரிப்பாளரை தும்பிக்கையால் தூக்கிவீசியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

கபார்செனோ தேசிய உயிரியல் பூங்காவில் புதன்கிழமை யானைகள் தொழுவத்தை பராமரிப்பாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அங்கு 4000 கிலோ எடையுள்ள ஒரு பெண்யானை தனது குட்டியுடன் சுத்திக்கொண்டிருக்கிறது. திடீரென மூர்க்கமடைந்த யானை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 44 வயது பராமரிப்பாளரை தும்பிக்கையால் அடித்து தூக்கி வீசியிருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்திருக்கின்றனர். ஆனால் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சிலமணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

31 வருடங்கள் நடந்துவரும் இந்த உயிரியல் பூங்காவில் இதுவரை இதுபோன்ற சம்பவம் அங்கு நடந்ததில்லை என்கின்றனர் சக ஊழியர்கள். இந்த பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை உட்பட கிட்டத்தட்ட 120 வகை உயிரினங்கள் உள்ளன.

இதேபோல் மாட்ரிட் பூங்காவில் கடந்தவருடம் 200 கிலோ எடையுள்ள கொரில்லா ஒரு ஊழியரை தாக்கியதில் கை எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com