காஷ்மீர் விவகாரம்: கையில் வாளுடன் ஜாவித் மியான்தத் மிரட்டல்

காஷ்மீர் விவகாரம்: கையில் வாளுடன் ஜாவித் மியான்தத் மிரட்டல்
காஷ்மீர் விவகாரம்: கையில் வாளுடன் ஜாவித் மியான்தத் மிரட்டல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத், கையில் வாளுடன் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில், பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி அணிந்து கலந்துகொண்ட அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மியான் தத், கையில் வாளுடன் இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். 

அப்போது, ‘காஷ்மீர் சகோதரர்களே, கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கிரிக்கெட் மட்டையால் சிக்சர் விளாச முடியும்போது, இந்த வாளால் மனிதர்களை ஏன் என்னால் கொல்ல முடியாது?’’ என்று வாளை நீட்டியபடி பேசினார். பின்னர் வாளை உறைக்குள் சொருகினார்.

அப்போது அவருக்குப் பின்னால் நின்ற ஒருவர், ’’அப்போது அவர் கிரிக்கெட் மட்டை கூர்மையாக இருந்தது. இப்போது வாள் கூர்மையாக இருக்கிறது’’ என்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக அவர் மிரட்டல் விடுக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com