ஒரே மாதத்தில் 10 பலி: இது எவரெஸ்ட் சோகம்!

ஒரே மாதத்தில் 10 பலி: இது எவரெஸ்ட் சோகம்!
ஒரே மாதத்தில் 10 பலி: இது எவரெஸ்ட் சோகம்!

எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியில் காணாமல் போன 4 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற நேபாள நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேர் கடந்த மாதம் காணாமல் போயினர். இவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், நேற்று 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஏறக்குறைய 8,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பகுதியில் முகாமிட்டு தங்கிய 4 வீரர்களும், மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவிகுமார் என்பவர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனைப் படைத்தார். இதையடுத்து திரும்பும் வழியில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற 10 பேர் பலியாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com