எத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி

எத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி
எத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி

எத்தியோப்பியாவில் நடந்த விமான விபத்தில் 157 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எத்தியோப்பியாவிலிருந்து 149 பயணிகள் மற்றும் 8 பேர் கொண்ட விமான குழுவுடன் போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு புறப்பட்டது. இந்த விமானம் எத்தியோப்பியா நேரப்படி காலை 8.38 மணியளவில் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட ஆறாவது நிமிடத்தில் விமான கட்டுபாட்டு அரையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானம் பிஷாப்டூ என்ற நகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது என எத்தியோப்பியா விமான அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் விமானத்தை தெடும் பணியில் ஈடுபட்டுவருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த 157 பேரும் விபத்தில் பலியாகியுள்ளதாக எத்தியோபியா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்துக்கு தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். இந்த விமானத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்துள்ளதாக விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com