பிரான்ஸ் அதிபர் தேர்தல்: மீண்டும் களம் காணும் மேக்ரோன்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: மீண்டும் களம் காணும் மேக்ரோன்
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: மீண்டும் களம் காணும் மேக்ரோன்

பிரான்ஸில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் குடிமக்களுக்கு அவர் எழுதிய கடிதம் அங்குள்ள ஊடகங்களில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், வரும் தேர்தலில் மீண்டும் மக்களின் நம்பிக்கையை எதிர்பார்த்து போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிபருக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 10 மற்றும் 24 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த மேக்ரோன் கடந்த சில வாரங்களாகவே உலக நாடுகளின் தலைவர்களுடன் இருநாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். குறிப்பாக போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி ரஷ்ய அதிபர் புடினுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com