”சும்மா குரைச்சுட்டே இருந்துச்சு அதான்..” - பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த மூதாட்டி!

”சும்மா குரைச்சுட்டே இருந்துச்சு அதான்..” - பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த மூதாட்டி!
”சும்மா குரைச்சுட்டே இருந்துச்சு அதான்..” - பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த மூதாட்டி!

தொல்லை கொடுக்கும் விதமாக தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்ததாகக் கூறி அண்டை வீட்டு நாயை தனது வீட்டு தோட்டத்தில் மூதாட்டி ஒருவர் உயிரோடு புதைத்திருக்கிறார். இந்த சம்பவம் பிரேசிலில் நடந்திருக்கிறது.

புதையுண்ட நாய் அந்த இடத்திலிருந்து உயிரோடு தப்பித்து வெளிவரும் வீடியோவை ஆதாரமாக கொண்டு நாயின் உரிமையாளர் அந்த முதிய பெண்மணி மீது போலீசிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நினா என்ற அந்த நாயின் உரிமையாளர் போலீசிடம், “அண்டைவீட்டைச் சேர்ந்த 82 வயதான முதிய பெண் தன்னிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அடிக்கடி நாய் குரைத்துக் கொண்டே இருப்பதால் எனக்கு தொந்தரவாக இருக்கிறது எனச் சொல்லி என்னிடம் சண்டையிட்டு வந்தார்.

இப்படியாக இரவு நேரத்தில் குரைத்துக் கொண்டே இருந்தால் என் வீட்டு தோட்டத்தை அந்த நாயை உயிரோடு புதைத்து விடுவேன் என்றும் மிரட்டினார்.” எனக் கூறியிருகிறார்.

தன்னுடைய நாய் காணாமல் போனதை அறிந்த அதன் உரிமையாளரான 33 வயது பெண், மூதாட்டியின் வீட்டு தோட்டத்துக்கு சென்று பார்த்திருக்கிறார். அங்கு அண்மையில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டதற்கான பகுதியை கவனித்தவர் மண்வெட்டியை கொண்டு தோண்ட ஆரம்பித்திருக்கிறார்.

அப்போது நாயை உயிரோடு புதைத்ததை கண்டதும் அதிர்ந்து போன பெண்ணிடம், அந்த மூதாட்டி அதனை இனி மேலும் சத்தம் போடாமல் இருக்கச் செய் என்றும் கூறியிருக்கிறாராம். இதன் மூலம் சில மணிநேரங்களுக்கு நாய் உயிரோடு புதைக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இருப்பினும் இதற்கெல்லாம் அஞ்சாமல் இருந்த அந்த முதிய பெண்மணி,. நாயை புதைத்ததற்காக எந்த வருத்தமும் அடையவில்லை என உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். இதுபோக போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போதும் அந்த முதிய பெண், நாயை மீண்டும் புதைப்பேன் என்று கூறியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com