டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த அரசியல் தலைவர். தனது அதிரடி அறிவிப்புகளையும், விமர்சனங்களையும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளிப்படுத்த அவர் சமூ வலைதளங்களையே முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வந்தார். ஆனால் ஜனவரி 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரம்பின் அக்கவுண்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.