இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்த்தனே

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்த்தனே
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்த்தனே

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனே (73) இன்று பதவியேற்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியதை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக தொடரும் இந்த மக்கள் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த மே மாதம் பதவி விலகினார். இதனைத்தொடர்ந்து, இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து, பொருளாதாரத்தை சீரமைக்க புதிய அரசுக்கு அவகாசம் வழங்கும் வகையில் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் நிறுத்தி வைத்தனர். ஆனால், பொருளாதார நிலை சீரமைக்கப்படாததால் கொதித்தெழுந்த மக்கள், இந்த மாதத் தொடக்கத்தில் தலைநகர் கொழும்புவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதிபரின் மாளிகையும் சூறையாடப்பட்டது. இதையடுத்து, உயிருக்கு பயந்து கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோடினார். அதன் பிறகு தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடியே, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், இடைக்கால அதிபராக ரணில் விக்ரசிங்கவை நியமித்தார். இதனிடையே, அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைப்படி போட்டியிட்டு ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அண்மையில் அவர் முழுநேர அதிபராக நேற்று பொறுப்பேற்றார்.

இந்த சூழலில், தனக்கு கீழ் செயல்படும் அமைச்சரவையை அமைக்கும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இலங்கை உள்துறை அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்த்தனவை பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரசிங்க நியமித்தார். இதன் தொடர்ச்சியாக, தினேஷ் குணவர்த்தன இலங்கையின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com