அமெரிக்கா: டெக்சாஸ் மாகாணத்தில் அதிகரித்த டெல்டா வகை கொரோனா.. நிரம்பிய ஐசியு படுக்கைகள்

அமெரிக்கா: டெக்சாஸ் மாகாணத்தில் அதிகரித்த டெல்டா வகை கொரோனா.. நிரம்பிய ஐசியு படுக்கைகள்
அமெரிக்கா: டெக்சாஸ் மாகாணத்தில் அதிகரித்த டெல்டா வகை கொரோனா.. நிரம்பிய ஐசியு படுக்கைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட பல மாகாணங்களில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 24 லட்சம் மக்கள் தொகை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியில், தற்போது ஆறு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மட்டுமே உள்ளன என்று  சுகாதாரப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்டா வகை வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பது குறித்தும், தடுப்பூசி போடவும், வீட்டிலேயே இருக்கவும், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது பற்றியும்  குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மாகாண அரசு மக்களுக்கு அறிவிப்பை அனுப்பி வருகிறது.

டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மாதத்தை விட 600% க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் எண்ணிக்கை 570%ஆக உயர்ந்தனர். வென்டிலேட்டர்களில் உள்ள கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 102 ஆக உயர்ந்துள்ளது, இது ஜூலை 4 -ம் தேதி எட்டாக இருந்தது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் புதிய நோய்த்தொற்றுகள் சராசரியாக தினசரி 1 இலட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளன, ஆறு மாதங்களுக்கு முன்பு குளிர்காலத்தில் இருந்த அளவுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவின் வாராந்திர பாதிப்பு 750,000யை கடந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com