மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா இன்று முடிவு?

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா இன்று முடிவு?
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா இன்று முடிவு?

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா இன்று முடிவெடுக்கு‌ம் என தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்புக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக்கோரி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்‌ட நாடுகள் தீர்மானத்தை முன்மொழிந்தன. 

அதன்பின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ஐநாவில் உள்ள அல்கொய்தா தடை கமிட்டி இன்று கூடுவதால் மசூத் அசார் விவகாரத்தில் முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. சீனா, மசூத் அஸார் விவகாரத்தில் தனது பிடியை தளர்த்தி இருப்பதால் அவர் இன்றே சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. சீன வெளியுறவு து‌றை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், மசூத் அசார் விவகாரத்திற்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்படும் என‌‌ நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com