இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு
இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித் தன. காலை 8.45 மணி முதல் 9.05 மணிக்குள் 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. பிற்பகல், 1.45 மணியளவில் தெஹிவளையில் தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது.  தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதில், இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 27 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்து‌மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் 7 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

தொடர் குண்டுவெடிப்பு காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் ட நிலையில், அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேன. அதேபோல், நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படும் என வும் அறிவித்துள்ளார். 

குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு காரணம் என கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடந்துவருகிறது. 

இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 310 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com