“இந்திய மக்களே பிரான்ஸ் உங்களுடன் உள்ளது!” - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன்

“இந்திய மக்களே பிரான்ஸ் உங்களுடன் உள்ளது!” - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன்
“இந்திய மக்களே பிரான்ஸ் உங்களுடன் உள்ளது!” - பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு உதவ தயார் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் தனது ஆதரவு கரத்தை நீதி உள்ளது. 

“இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். இந்த அசாதாரண சூழலில் பிரான்ஸ் உங்களுடன் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளோம்” என மக்ரோன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில் பிரான்ஸ் தனது ஆதரவை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது. அதேபோல், சீனா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன் வந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com