சில வெளிநாடுகளில் கருவில் இருக்கும் தங்கள் குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விழாவாக ஏற்பாடு செய்து அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் துபாயில் வசிக்கும் ஒரு தம்பதியர், பிறக்கப்போகும் தங்கள் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துவதற்காக ஹோட்டல் ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஹோட்டலில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்புப் புலி ஒன்று விருந்தினர் ஏற்பாடு செய்திருந்த மிதக்கும் பலூனை தாவி உடைத்தது. அப்போது அதிலிருந்து வண்ணப்பொடி கொட்டியது.