அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா!
Published on

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உயர்மட்ட உதவியாளருமான ராபர்ட் ஓ பிரையனுக்கு இன்று கொரோனா உறுதி தொற்று செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பிய ஓ பிரையனும் அவரது மனைவியும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் அதிகாரிகளை சந்தித்து வந்துள்ளனர். மேலும், பிரையன் கடந்த 10 ஆம் தேதி கடைசியாக ட்ரம்ப்பை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ட்ரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமான அதிகாரி. தற்போது வீட்டிலேயேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுவரை அமெரிக்காவில் 1 லட்சத்திற்குமேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com