அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா தினசரி பாதிப்பு

அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா தினசரி பாதிப்பு
அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா தினசரி பாதிப்பு

அமெரிக்காவில் இதுவரை இல்லாத உச்சமாக தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்றைய தினம் 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதியான நிலையில், ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பெருந்தொற்று தொடங்கியது முதல் அமெரிக்காவில் பதிவாகும் உச்சபட்ச தினசரி பாதிப்பு இது.

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸிலும் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. ஸ்பெயினில் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேருக்கும், இத்தாலியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதால் எதிர்வரும் நாட்களில் மேலும் கொரோனா பாதிப்பு உயரும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com