\
கிம் ஜாங் யுன் -ஐக் கொல்ல சிஐஏ சதி: வடகொரியா புகார்

கிம் ஜாங் யுன் -ஐக் கொல்ல சிஐஏ சதி: வடகொரியா புகார்

கிம் ஜாங் யுன் -ஐக் கொல்ல சிஐஏ சதி: வடகொரியா புகார்
Published on

வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன்-ஐ கொலை செய்ய, அமெரிக்காவின் சிஐஏ சதித்திட்டம் தீட்டியுள்ளதாக வடகொரியா பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக வட கொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற குழு, ரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டின் தலைவரைக் கொல்ல வந்துள்ள அந்தக் குழுவை கண்டறிந்து அழிக்கப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. கிம் ஜோங் யுன் பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல் வட கொரியா இத்தகவலை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com