பால்கனியில் சிக்கிய சிறுவன் ! பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ

பால்கனியில் சிக்கிய சிறுவன் ! பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ
பால்கனியில் சிக்கிய சிறுவன் ! பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ

சீனாவில், 4 ஆவது மாடியின் பால்கனி ஜன்னல் கம்பியில் சிக்கிக்கொண்ட 4 வயது சிறுவனை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்நாட்டின் ஷாண்டோங் மாகாணம், லினாய் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

வீட்டில் குழந்தையை தனியாக விட்டு விட்டு பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில் அந்த சிறுவன் பால்கனியில் உள்ள கம்பிகள் கொண்ட ஜன்னலில் சிக்கிக்கொண்டுள்ளான். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனின் தாத்தா, திடீரென சிறுவனின் அழுக்குரல் கேட்டு எழுந்துள்ளார். அப்போது பால்கனியில் சிக்கிக்கொண்டிருந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த மீட்புக்காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படமெடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com