ஓராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பு - வூஹானில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய சீனா முடிவு

ஓராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பு - வூஹானில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய சீனா முடிவு
ஓராண்டிற்கு பிறகு முதல் கொரோனா பாதிப்பு - வூஹானில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய சீனா முடிவு
சீனாவின் வூஹான் நகரில் ஓராண்டிற்கு பிறகு முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
2019 டிசம்பர் மாத கடைசியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வியாபித்து பரவியது. இதற்கிடையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட சீனா, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தொற்றுப் பரவலை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது சீனாவில் உருமாறிய கொரோனாவான டெல்டா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் கால் பதித்து பரவி விட்டது.
குறிப்பாக, கொரோனா முதல்முறையாக கண்டறியப்பட்ட வூஹான் நகரில் ஓராண்டிற்கு பிறகு, ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வூஹான் நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் நியூக்ளிக் அமில சோதனை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com