இந்திய எல்லை அருகே சீனா போர் பயிற்சி!

இந்திய எல்லை அருகே சீனா போர் பயிற்சி!

இந்திய எல்லை அருகே சீனா போர் பயிற்சி!
Published on

அருணாசலப்பிரதேசத்தில் இந்திய எல்லை அருகே சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிக்கிமில் உள்ள டோக்லாமில் இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் சீனாவின் இந்தப் போர் பயிற்சி பதற்றத்தை அதிகரித்துள்ளது. சீன ராணுவத்தின் கூட்டு படைகள், சுமார் 11 மணிநேரம் இந்த போர் ஒத்திகையில் ஈடுபட்டது என சீனா செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் திபெத் ராணுவ பிரிவின் ஒரு படையும், இரண்டு மலை படைகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோவையும் சீன ராணுவம் வெளியிட்டுள்ளது. எதிரிகளின் ராணுவ விமானங்களை தாக்கும் விதமான இலக்குடனும் பயிற்சி நடைபெற்று வருகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com