பாதுகாப்பு துறைக்கு ரூ.17.57 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ள சீனா

பாதுகாப்பு துறைக்கு ரூ.17.57 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ள சீனா
பாதுகாப்பு துறைக்கு ரூ.17.57 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ள சீனா

பாதுகாப்பு துறைக்கு ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா ஒதுக்கியுள்ள நிதியை விட சீனா மூன்று மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டின் நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த நிதியாண்டில் பாதுகாப்பு துறைக்கான வரவு செலவு திட்டத்தை சீன அரசு முன்மொழிந்துள்ளது. அதில், பாதுகாப்புத்துறைக்கு மட்டும் கடந்த ஆண்டைவிட 7 புள்ளி ஒரு சதவிகிதம் அதிகரித்து 17 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக சீன அரசின் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு சீனா 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கியுள்ளது இதுவே முதன்முறையாகும். அதேநேரம், 2022ஆம் நிதியாண்டுக்கு இந்தியா 5 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com