ஸ்மார்ட்போன் விளையாட்டால் பார்வை இழந்தார் இளம்பெண்

ஸ்மார்ட்போன் விளையாட்டால் பார்வை இழந்தார் இளம்பெண்

ஸ்மார்ட்போன் விளையாட்டால் பார்வை இழந்தார் இளம்பெண்
Published on

மணிக்கணக்கில் தொடர்ந்து ஸ்மார்ட்போனில் விளையாடிக்கொண்டிருந்த சீன இளம்பெண் ஒருவர், பார்க்கும் திறனை இழந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் ஷான்ஷி மாகாணத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஹானர் ஆஃப் கிங்ஸ் என்ற செல்போன் விளையாட்டை டவுன்லோட் செய்து விளையாடி வந்திருக்கிறார். வேலை முடித்து வந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் மணிக்கணக்கில் இந்த விளையாட்டை அவர் விளையாடி வந்திருக்கிறார். விடுமுறை நாட்களில்‌ காலை 6 மணிக்கு எழுந்ததில் இருந்து, மாலை 4 மணிவரை இடைவெளி இல்லாமல் விளையாடி வந்துள்ளார். இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு கண்ணில் பார்வைத்திறன் மங்கியுள்ளது. பின்னர் முற்றிலும் அந்தக் கண்ணில் பார்வை பறிபோய் இருண்டு விட்டது. இதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரெடினல் அர்டெரி அக்லுஷன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண் பாதிப்புக்குள்ளான பெண் விளையாடி வந்த ஹானர் ஆஃப் கிங்ஸ் விளையாட்டை கோடிக்கணக்கானோர் டவுன்லோடு‌ செய்து விளையாடிவரும் நிலையில், இந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com