நம்பிக்கைத் துரோகம்: சீனா டென்ஷன்

நம்பிக்கைத் துரோகம்: சீனா டென்ஷன்
நம்பிக்கைத் துரோகம்: சீனா டென்ஷன்

சிக்கிம் எல்லையில் இந்தியா படைகளை குவித்திருப்பது நம்பிக்கை துரோகம் என சீனா விமர்சித்துள்ளது.

இந்திய -சீன எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதாக சீன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். சீன பகுதிக்குள் நுழைந்து சீன வீரர்கள் தங்களது வழக்கமான பணியை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் இந்திய வீரர்கள் எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை மீறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். 
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இந்திய ராணுவம் பின்வாங்கி அமைதி நிலவ வழிவகை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இப்போதிருக்கும் இந்தியா, 1962ம் ஆண்டு சீன யுத்தத்தின்போது இருந்த இந்தியா அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தது குறித்து கருத்து தெரிவித்த சீன செய்தித்தொடர்பாளர், சீனாவும் மாறியிருப்பதாக, அதன் பகுதிகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என கூறினார். பூட்டான், சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப்பகுதியான டோக் லா வில் கடந்த ஒரு மாதமாகவே பதற்றமான சூழல் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com