28 ஆண்டுகளுக்குப்பின்.. முதன்முதலாக வெளி உலகை பார்த்த சிம்பன்சி! #ViralVideo

தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த 28 வயதான சிம்பன்சி, கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.
சிம்பன்சி
சிம்பன்சிTwitter

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டில் அடைபட்டிருந்த சிம்பன்சி ஒன்று 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகத்தை பார்த்து மகிழ்ந்துள்ளது.

28 வயதான வெண்ணிலா (Vannila) என்ற சிம்பன்சி ஆரம்ப காலத்தில் மருத்துவ ஆய்வு கூடத்தில் வளர்ந்துள்ளது. பிறகு கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றப்பட்டது.

சிம்பன்சி Vannila
சிம்பன்சி Vannila

கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த சரணாலயம் மூடப்பட்டதால், புளோரிடா சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக கூண்டிற்குள் அடைபட்டிருந்த சிம்பன்சி இப்போது திறந்துவிடப்பட்டுள்ளதால் வெளி உலகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com