ஸ்பெயினில் குழந்தைகளை வெளியே அழைத்து வர அனுமதி

ஸ்பெயினில் குழந்தைகளை வெளியே அழைத்து வர அனுமதி

ஸ்பெயினில் குழந்தைகளை வெளியே அழைத்து வர அனுமதி
Published on

ஸ்பெனில் இன்று முதல் குழந்தைகளை வெளியே அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முகக்கவசங்கள் விநியோகிக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பயிட்டு வருகின்றன.

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரம் கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பதை தவிர்க்கும் வகையில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்களை நாளை முதல் வெளியே அழைத்து வர அனுமதி தரப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கிற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் மே மாதம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பினேடா டா மார் நகரில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முகக்கவசங்கள் விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வீடு, வீடாகச் சென்று அதிகாரிகள் குழந்தைகளுக்கு முகக்கவசங்களை வழங்கினர். ஒவ்வொரு குழந்தைக்கும் தலா இரு முகக்கவசங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com