இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் காவல் துறைத் தலைவர் அந்தோனி ஹோலோவே, “கடந்த மார்ச் 30ஆம் தேதி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குடியிருப்பில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தார். விசாரணையில் அவரது பெயர் பஷூன் ஜெஃப்ரி என தெரியவந்தது. இதை, அவரது கணவர் தாமஸ் மோஸ்லியே செய்திருக்கலாம் எனச் சந்தேகப்பட்டோம். அத்துடன் அவர் மனைவி கொலை செய்யப்பட்ட நேரம் முதல் அவரது குழந்தையையும் காணவில்லை. இதனால் மேலும் சந்தேகம் வந்து தீவிர விசாரணையில் இறங்கினோம்.
இந்த நிலையில்தான் டெல் ஹோம்ஸ் பூங்கா அருகே, அதாவது ஜெஃப்ரியின் குடியிருப்பிலிருந்து கொஞ்ச தொலைவில் இருந்த பூங்காவில் முதலை ஒன்று ஏதோ வாயில் கவ்வியிருப்பதைக் கண்டோம். அதன் வாயில் சிக்கிய பொருளை மீட்க முயன்றோம். அது முடியாததால், முதலையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அது கவ்வியிருந்த பொருள் என்னவென்று பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அது ஒரு குழந்தையின் சடலத்தை உள்ளே வைத்திருந்தது.
காணாமல் போனதாகத் தேடப்பட்ட ஜெஃப்ரியின் குழந்தைதான் அது. நாங்கள் குழந்தையை இப்படிக் கண்டுபிடிப்போம் என்று துளியும் நினைக்கவில்லை. இதை ஏற்றுக்கொள்ளவே எங்களுக்குக் கொஞ்ச நேரமானது. என்றாலும், அந்த குழந்தை முதலையிடம் சிக்கி உயிரிழந்ததா அல்லது அதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதா என மருத்துவ அறிக்கை வந்தால்தான் உண்மை தெரியவரும். மனைவி மற்றும் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக தாமஸ் மோஸ்லி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம், சுறாவின் வயிற்றுப் பகுதியில் இருந்து அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த 32 வயதான டியாகோ பரியா என்பவர் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது அவருக்கு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியைத் தந்தது.